Tuesday, August 4, 2009

முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி பிறந்த நாள் : மாநிலம் முழுவதும் கொண்டாடம்






முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று தனது 60வது பிறந்தநாளை தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். அவரது பிறந்த நாளையட்டி உழவர்கரை நகராட்சி தலவர் ஜெயபால் தலைமையில் மணக்குள விநாயகர் கொயிலில் இன்று காலை தங்கத் தேர் இழுத்தனர். மேலும், திலாஸ்பேட்டை காளி கோயில், கதிர்காமம் முருகன் கோயில் சண்முகாபுரம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விவிபி நகரில் 1000 பேருக்கும், பத்துகண்ணு பகுதியில் 500 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கதிகாமத்தில் 60 பேர் கண்தான உறுதிப்பத்திரம் வழங்கினர். சாரதாம்பாள் நகரில் உள்ள ஊனமுற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதுபோல் புதுவை நகரின் பல இடங்களிலும் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் செய்திருந்தனர்.

சட்ட சபையில் வாழ்த்து:
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதிமுக உறுப்பினர் பேசி முடித்ததும் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு இன்று பிறந்த நாள். அனைத்து உறுப்பினர்கள் சார்பில் அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment