Tuesday, August 4, 2009

புதுவை பட்ஜெட் நாளை தாக்கல்



புதுவை சட்டசபையில் நாளை(புதன்கிழமை) 2009-10ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் மாற்றத்திற்குபின் புதுவையில் 2வது முறையாக முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட வைத்திலிங்கம் நாளை காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்கிறார்.

6-வது சம்பளக் குழு பரிந்துரையை கடந்த ஆண்டு நடைமுறப்படுத்தியதால் வள ஆதாரங்கள் குறைந்தது. நிலுவைத் தொகை வழங்க இருப்பதால் மேலும் வள ஆதாரங்கள் குறையும். எனவே கூடுதல் வள ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நிதிநிலை ஆறிக்கையினைத் தயாரிக்கும் பணியில் முதல்வர் வைத்திலிங்கம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிக்கலாம், எவைகளுக்கு வரி நீக்கலாம் என அதிகாரிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதால் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, இலவச பஸ் பாஸ், காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மர்றும் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment