Thursday, October 29, 2009

உலக சிக்கன நாள் விழா

புதுச்சேரி அரசு, திட்டம் மற்றும் ஆராச்சித் துறை சார்பாக உலக சிக்கன நாள் விழா நாளை (அக்டோபர் 30) காலை 9.00 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவில், முதலமைச்சர் திரு வெ.வைத்திலிங்கம் கலந்துகொண்டு சேமிப்பின் இன்றியமையாமை குறித்தும் சேமிப்பினால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிறப்புரையாற்றி, சிறுசேமிப்புத் திட்டத்தில் அதிக நிதி திரட்டிய வணிகவரித் துறைக்கு முதல் பரிசுக்கான சுழற்கேடயத்தையும், இரண்டவது பரிசு சுகாதாரத் துறைக்கும், மூன்றாவது பரிசு கூட்டுறவுத் துறைக்கும் மற்றும் நான்காவது பரிசு பொதுப்பணித்துறைக்கும் வழங்கவுள்ளார். மேலும், சஞ்சய்கா திட்டத்தின்கீழ் அதிக நிதி திரட்டிய வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுக்கான சுழற்கேடயங்கள் வழங்கப்படவுள்ளன. இதுதவிர, நான்கு துறைகளுக்கும், அரசு தொழிற்நுட்ப மேனிலைப் பள்ளிக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment