Friday, October 2, 2009

காந்தி வழியில் அமெரிக்கா


காந்தி பிறந்தநாளையட்டி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர், " மகாத்மா காந்தி அறிமுக செய்த வன்முறை இல்லாத போராட்டம் இன்று உலகுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. மார்ட்டின் லூதர் கிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மகாத்மா கந்தியின் கொள்கைகளையும், வழிகாட்டுதல்களையும் தெரிந்து கொண்டு அதே முறையை அமெரிக்காவில்பின்பற்றினார். இந்த வழிய்ல் உரிமைப் போராட்டங்கள் நடந்தன. இன்று அமெரிக்கா மகாத்மா காந்தியின் வழியில் செல்கிறது. அவருடைய போராட்டங்கள், கொள்கைகள், அறிவுரைகள் அனைத்தும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.  


எனது "ஹீரோ" மகாத்மா காந்தி என்று ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment