Thursday, October 29, 2009

சாகித்ய அகாதெமி துணைத்தலைவர் புதுச்சேரி வருகை


சாகித்ய அகாதெமியின் துணைத்தலைவர் திரு.எஸ்.எஸ்.நூர் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் நடைபெற்ற பஞ்சாபி மொழி ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அன்று மாலை அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்ற தமிழ்‍‍, பஞ்சாபி கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். பின்னர்,சாகித்ய அகாதெமியின் புதுச்சேரி விற்பனை மையத்தினைப் பார்வையிட்டு அதை விரிவுபடுத்துவது தொடர்பாக சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தனுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, விற்பனை மையத்தினைப் பார்வையிட வந்த எஸ்.எஸ்.நூர் அவர்களை மகரந்தன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete