Sunday, July 26, 2009

மாயமான மீனவர்களைத் தேடும் பணி தீவிரம் : தலைமை செயலர் கடிதம்

புதுவை வம்பாகீரப்பளையத்தைச் சார்ந்த மீனவர்கள் சுப்பிரமணி, ஜெயபால், நாகப்பன் ஆகிய 3 பேரும் கடந்த 15-ந் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது மாயமானார்கள். அவர்கள் மாயமாகி இன்றுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடற்பிரிவு காவலர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மீன் வளத்துறை இயக்குநர் ராமலட்சுமி கூறுகையில், " 15ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற சுப்பிரமணி, ஜெயபால், நாகப்பன் ஆகிய 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை என எங்களுக்கு 18ந் தேதி தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, புதுவை மற்றும் சென்னை கடற்பிரிவு காவலர்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கப்பல் மூலமும் விமானம் மூலமும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மீனவர்கள் மாயமானாது குறித்து அந்தமான் நிக்கோபார் மீன் வளத்துறை இயக்குநர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆழ் கடல் மீன்பிடி படகில் சென்று மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

புதுவை மீனவர்கள் மாயமானது குறித்து வங்க தேசத்தில் உள்ள இந்திய தூரகத்திற்கும், அந்தமான் தலைமை செயலருக்கும் புதுவைத் தலைமைச் செயலர் திரு சந்திரமோகன் தொலைநகலி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment