Monday, July 27, 2009

புதிய ஆளுநராக இக்பாசிங் இன்று பதவியேற்பு : புதுச்சேரியின் 22ஆவது கவர்னர்



புதுச்சேரியின் புதிய ஆளுநராக இக்பால் சிங் இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எச்.எல்.கோகலே அவர்கள் பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், புதுச்சேரி காவல் துறையினர் அளித்த காவலர் அணிவகுப்பு மரியாதையை துணைநிலை ஆளுநர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் திரு V. நாரயணசாமி, முதலமைச்சர் திரு V. வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆளுநர் பேட்டி:

புதுவை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், " புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் நலத்துறைகளில் புதுச்சேரி முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான வாழ்க்கையின் மூலம் புதுச்சேரி சிறந்த மனிதவள மேம்பாட்டை அடைந்துள்ளது. புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய அளித்த இந்த வாய்ப்பை எற்றுக்கொண்டு அவரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.

புதுவை மாநிலமானது அழகான தோற்றத்தினால் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இருக்கிறது. எனவே சுற்றுலாவின் உள்கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து சுற்றுலா பயணிகளையும் வரும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். இதற்கு உறுதுணையாக விமான தளம், துறைமுகம், சாலை, பாலம், சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். புதுவையில் கல்வியானது வளர்ச்சியடைந்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகம், 8 மருத்துவ கல்லூரிகள், 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவற்றுடன் தேசிய தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் இன்னும் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதனால் புதுக்சேரியின் கல்வித்தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. புதுவையில் பால் வளம், மீன் வளம் நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். புதுவையில் பெண்கள், ஆதி திராவிடர், பின்தங்கிய மக்களுக்கு உரிய சம உரிமை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து புதுவையின் பொருளதார வளர்ச்ச்சிக்கு வழி காணப்படும்" என்று கூறினார்.

***

முன்னதாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொள்ள நேற்றிரவு இக்பால் சிங் புதுவை ராஜ் நிவாசுக்கு வருகை தந்தார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் சும்மர் 50 பேர் தெங்கய் உடைத்து, பன்னீர் தெளித்து உற்சாகமாக வரவேற்றனர்.

புதுவை மாநிலத்தின் 22வது ஆளுநராக பதவியேர்றுள்ள இக்பால் சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றிய்ள்ளார். மேலும் கங்கிரஸ் காரிய கமிட்டியின் சிறப்பு அழைப்பளராகவும் இருந்துள்ளார். கடந்த 1997 முதல் 2001 வரை அகில இந்திஅய காங்கிரஸ் கமிட்டி செயலாளராராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete