Wednesday, July 29, 2009

மகான் அரவிந்தர் தபால்தலை விரைவில் வெளியீடு : மத்திய அமைச்சர் நாராணசாமி தகவல்


மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் V. நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நான் கல்வி அமைச்சர் கபில் சிபலை கடிதம் மூலமும் நேரடியாகவும் தொடர்புகொண்டு தேசிய தொழில்நுட நிறுவனத்தில் 35 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்; புதுவையில் என்.அய்.டி கல்வி நிறுவனம் வருவதற்கு முன்பாக இது தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை அமைச்சரும் எற்றுக் கொண்டு 35 இடங்களை புதுவைக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதற்கிடையில் 5 இடங்கள் திருச்சி என்.அய்.டி.யில் ஒதுக்கப்பட்ட இடத்தை ஒன்றாகக் குறைப்பதாக கேள்விப்பட்டு தொடர்ந்து 5 இடங்களை கொடுப்பதற்காக நான் வலியுறுத்தியிருக்கிறேன். தொடர்ந்து இந்த ஆண்டு புதுவை மாணவ-மாணவிகள் என்.அய்.டி.யில் சேர்ந்து படிக்கும் நிலை உருவாக்கித்தர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது, அதுமட்டுமல்லாமல் புதுவை மாநிலத்தில் என்.அய்.டி. நிறுவநனத்தைத் திறப்பதற்கான முயற்சியும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

தபால் தலை:

மத்திய தபால் தந்தி துறை மந்திரி ராசாவை நானும் அரவிந்தர் ஆசிரமத்தினுடைய நிர்வாகி புருஷோத்தமனும் சந்திது வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மகான் அரவிந்தர் 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தபால் தலை வெளியிடுவதற்கு கேட்டுக் கொண்டோம். மத்திய அமைச்சர் ராசா அதை ஏற்றுக்கொண்டு 04.04.2010 அன்று சிறப்பு தபால் தலை வெளியிட அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment