Saturday, July 25, 2009

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக திரு இக்பால் சிங் 27ஆம் தேதி பதவியேற்பு


புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக பஞ்ஜாப் மாநிலத்தைச் சார்ந்த திரு இக்பால் சிங் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த திரு கோவிந்சிங் குர்ஜாரின் திடீர் மறைவையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் பதவி மார்ச் மாதம் 2009 முதல் காலியாக இருந்துவந்தது. தமிழக ஆளுநனர் திரு சுர்ஜித்சிங் பர்னாலா புதுவை மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில் மேதகு குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் திரு இக்பால் சிங் அவர்களை புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமித்து இம்மாதம் 18ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் உத்தரவு பிரப்பித்தார். இதனையடுத்து, திரு இக்பால் சிங் அவர்கள் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்.

இவ்விழவில், மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சார துறை இணையமைச்சர் திரு V. நாரயண்சாமி, முதலமைச்சர் திரு.வெ. வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment