Sunday, July 26, 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா


பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ 1991ஆம் ஆண்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா நெருங்கும் நேரத்தில் சில அமைப்புகள் தடை கோரியதால் திறப்பு விழா நிறுத்தப்பட்டது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டபின் அங்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்திருந்தார். சிலை திறப்பது தொடர்பாக தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடனும் கர்நாடக அரசுடனும் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் சென்னை வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் சந்திதார். சிலை திறப்பு குறித்து இருவரும் பேசினர். பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை ஆகஸ்ட் 9-ம் தேதியும் சென்னையில் கன்னட கவிஞ்ஞர் சைவக்ஞர் சிலையை ஆகஸ்ட் 13-ம் தேதியும் திறக்க முடிவானது. இரு மாநிலங்கள் இடையிலான நல்லுறவை சிலை திறப்பு விழாக்கள் மேம்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையில், பெஙளூரிலும் இடைத்தேர்தல் நடப்பதால் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி வேண்டி தேர்தல் கமிஷனுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. விழவுக்கு தேர்தல் கமிஷனும் ஒப்புதல் அளித்துள்ளதால் விழ ஏற்பாடுகல் தீவிரமடைந்துள்ளன. விழவில் தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்ப, இரு மாநில அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

பெங்களூர் ஏரிக்கரையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பீடத்தில் வைக்க 400 கிலோ எடையில் வெண்கல சிலை தயாராக உள்ளது. 1991-ல் வடிவமைக்கப்பட்ட பைபர் சிலை, பெங்களூர் தமிழ் சங்கத்தில் நிறுவப்படும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வள்ளுவர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் ஆகஸ்ட் 9,10-ஆம் தேதிகளில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளூக்கு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் திறக்கப்பட உள்ள சைவக்ஞரின் சிலை பெங்களூரில் இருந்து பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment