Friday, July 31, 2009

வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டு புனித தீர்த்தம்



வில்லியனூர் மாதா ஆலய குளத்தில் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் ஊற்றும் விழா, மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழவையட்டி காலை 5.30 மணிக்கு திருப்பலியும், குளத்தைச் சுற்றி சிறிய தேர் பவனியும் நடக்கிறது. காலை 6.30 மணிக்கும் பகல் 11.30 மணிக்கும் திருப்பலி பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொவில் வளாகத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்சு நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் கலக்கப்படுகிறது. விழவிற்கு முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்ட்டின் தலைமை தாங்குகிறார். விழா ஏற்பாடுகளை வில்லியனூர் மாதா கொவில் பங்கு தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment