Friday, October 2, 2009

புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி


காஞ்சிபுரம் செய்யாறு பகுதியைச் சார்ந்தவர் லோகநாயகி (52). இவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அவர் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 25ஆம் தேதி திண்டிவனம் கட்டளை மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜனார்த்தனன் (32) என்பவர் உடல்நில பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஜிப்மரில் சேர்ந்தார். மருத்துவர்கள் அவரது இரத்த மாதிரியை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பினர். இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. எனவே மருத்துவர்கள் அவரை தனி அறையில் வைத்தி சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்ஸிசன் மூலக் சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சி பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாமபமாக இறந்தார். இவரது இறப்பின் மூலம் புதுவையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment