Thursday, July 30, 2009

தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்கள் நாளை(31-07-2009) புறக்கணிப்பு : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு


நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சம்மேளம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. காசோலை மோசடி வழக்குகளை தாக்கல் செய்யும்போது அதன் மதிப்பில் பாதித்தொகையை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது

2. நுகர்வோர் நீதிமன்ற தலைவர்களாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதை 65 வயதாக உயர்த்த வேண்டும்

3. சட்ட ஆலோசனை வழங்கினால் சேவை வரி வசூலிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

4. வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் பொய்வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசும் உயர்நீதி மன்றமும் ஒரு குழு அமைக்க வேண்டும்

5. வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும்

6. வ்வொரு நீதிமன்றத்திலும் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி நாளை ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment